ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம் : வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம் : வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு
x
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில், மற்றொரு வழக்கில் ஆஜராவதால், இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு, இன்பதுரை தரப்பு வழக்கறிஞர் முகுல்ரோத்தகி முறையீடு செய்தார். இதனை ஏற்று, நீதிபதிகள் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஜனவரிக்கு ஒத்திவைத்தனர். இதனால், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வரும் 11ஆம் தேதி வரை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்