சூடான் தொழிற்சாலை தீ விபத்து : "தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

சூடான் தொழிற்சாலை விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
சூடான் தொழிற்சாலை தீ விபத்து : தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
x
சூடான் தொழிற்சாலை விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், சூடானில் உள்ள தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு, அதில் தமிழர்கள் சிக்கிய செய்தியை ஊடகம் மூலம் அறிந்து கொண்டதாக  கூறியுள்ளார். விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளதை கருத்தில் கொண்டு தூதரக அதிகாரிகள் மூலம் தக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி, தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்