சேலம்: பாகனை மிதித்து கொன்ற கோயில் யானை
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை திடீரென ஆக்ரோஷமாகி பாகனை மிதித்துக் கொன்றது.
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை திடீரென ஆக்ரோஷமாகி பாகனை மிதித்துக் கொன்றது. மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து 2009 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆண்டாள் என்ற யானையை காளியப்பன் என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் யானையின் உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களை யானை தாக்க முயற்சித்துள்ளது. இதனையடுத்து அதனை கட்டுப்படுத்த முயற்சித்த பாகன் காளியப்பனை யானை தாக்கியுள்ளது. அதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு காளியப்பன் உடல் மீட்கப்பட்டது. சுமார் 68 வயதான ஆண்டாள் யானை தாக்கியதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story