மீன் பொருள் விற்பனை நிறுவனத்தில் வருமான வரி சோதனை - அலுவலகத்திலேயே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அந்த நிறுவனத்தின் ஊழியர் செந்தில்குமார் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செந்தில் குமாரின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
இந்நிலையில் நிறுவனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட்டிஸ்கில் செந்தில்குமார் அதே நிறுவனத்தில் வேலை புரியும் பெண்களை மறைந்திருந்து வீடியோக்கள் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் வெளியில் தெரிந்ததால் தான் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Next Story