"தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை" - வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வா னிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த, வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இந்த தகவலை வெளியிட்டார். சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், அப்போது அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்