பொன்னேரி : தேசிய அளவிலான கபடி போட்டியில் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான கபடி போட்டியில் தங்கம் வென்று பொன்னேரி திரும்பிய வீரர்களுக்கு பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொன்னேரி : தேசிய அளவிலான கபடி போட்டியில் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
x
தேசிய அளவிலான கபடி போட்டியில் தங்கம் வென்று பொன்னேரி திரும்பிய வீரர்களுக்கு பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டியில் பொன்னேரி சுற்றுவட்டார பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர், 19 வயதுக்கு மேற்பட்டோர் ஆகிய 4 பிரிவுகளிலும் நடைபெற்ற போட்டிகளில் பொன்னேரியில் இருந்து சென்ற தமிழக அணியினர் தங்கம் வென்றனர். ஊர் திரும்பிய அவர்களை உறவினர்கள் பேண்டு வாத்தியம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். வீரர்களுக்கு கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்