செவிலியர் மாணவிகள் சாலைமறியல் : அடிப்படை வசதி இல்லை என புகார்
திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் செவிலியர் மாணவிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் செவிலியர் மாணவிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தங்கும் விடுதியில் அறை கதவுகள், ஜன்னல்கள், சுவர் சேதம் அடைந்திருப்பதாக அச்சம் தெரிவித்த மாணவிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம்சாட்டினர். மருத்துவக் கல்லூரி டீன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
Next Story