5 ஆயுள் கைதிகள் விடுதலை குறித்த விவகாரம்: "உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆஜராக வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 ஆயுள் கைதிகள் விடுதலை குறித்த விவகாரம்: உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆஜராக வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
x
1000 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாரணை பிறப்பித்தது. இதன் படி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்திவேல் உள்ளிட்ட ஐந்து பேரை விடுவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை தள்ளி வைக்கும்படி அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, கூடுதல் டி.ஜி.பி., ஆபாஷ்குமார், கோவை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை நேரில் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  பின்னர் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். நேரில் ஆஜராகாமல் இருக்க உச்ச நீதிமன்றத்தை அணுகி தகுந்த உத்தரவை பெற்றுக் கொள்ளலாம் எனவும், நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்