"டுவிட்டர் பதிவை நீக்காவிட்டால் போராட்டம்" - அமைச்சர் பாண்டியராஜன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை களங்கப்படுத்தும் ட்விட்டர் பதிவை நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவை நீக்காவிட்டால் போராட்டம் - அமைச்சர் பாண்டியராஜன்
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை களங்கப்படுத்தும் ட்விட்டர் பதிவை நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற, நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நீரிழிவு நோய் தாக்கம் 8 புள்ளி 9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும், நீரிழிவு நோயின் கேபிட்டலாக தமிழகம் உள்ளது என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் உள்ள ட்விட்டர் பதிவை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்