"மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க கூடாது" : மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். சேலம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவாசகம் கடந்த 29ம் தேதி கேரள வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் மணிவாசகத்தின் சொந்த ஊரான ராமமூர்த்தி நகர் பகுதியில் அவர் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். இந்தநிலையில் மணிவாசகத்தின் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்க கூடாது என்று ஊர் மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். மேலும் அவரின் உடல் ஊருக்குள் புதைக்கப்பட்டால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆண்டுதோறும் மாவோயிஸ்டுகள் வரக்கூடும் என்றும், அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Next Story