"குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை : குழந்தையோடு ஆட்சியரிடம் புகார் அளித்த பெற்றோர்"

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை : குழந்தையோடு ஆட்சியரிடம் புகார் அளித்த பெற்றோர்
x
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சிவதாபுரம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன், மைதிலி தம்பதியர்களின் மகன் ஹரிகுகன், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிறுவனுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால், அவன் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு வந்த பெற்றோர்கள்,சிறுவனை காப்பாற்றுமாறு, ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்