ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் : தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தீபா மனு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுக்க தடை விதிக்க கோரி தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் : தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தீபா மனு
x
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். இதே போல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக, கவுதம் வாசுதேவ்மேனன் தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என தாம் அஞ்சுவதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் எனவும் மனுவில் தீபா தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணை வர உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்