தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
x
நாகூரில் சோதனை - ஒருவரிடம் விசாரணை

நாகையில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை, கோவை, காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் மியாந்தெரு சாதிக்அலி என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த முகமது அஜ்மல் என்பவரிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையால் நாகூரில் பரபரப்பு நிலவி வருகிறது.

கோவை : என்.ஐ.ஏ சோதனை - 2 பேரிடம் விசாரணை



கோவை, உக்கடம் பகுதியில் சமீர் மற்றும் செளருதீன் ஆகியோரின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், லேப்டாப், சிம்கார்டு, மெமரி கார்டு, மொபைல் போன்  உள்ளிட்டவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் பந்தயசாலையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ சோதனை - கார் டிரைவர் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்



திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். வாடகை கார் ஓட்டுனரான சாதுஅலி என்பவரது வீட்டில் நடைபெற்ற இந்த சோதனையில், செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். சாதுஅலி வெளியூர் சென்றிருந்த நிலையிலும், அவரது வீட்டில் இருந்த நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்