ராசிபுரம் : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

ராசிபுரம் அருகே திருமணித்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், 4 கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்
x
ராசிபுரம் அருகே திருமணித்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், 4 கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதியம்பட்டி திருமணித்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதியம்பட்டியில் இருந்த தற்காலிக தரைப்பாலம் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், 4 கிராமமக்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாயம் மற்றும் சாக்கடை கழிவுகள் கலந்து கருப்பு நிறத்தில் திருமணிமுத்தாறில் தண்ணீர் பாய்ந்தோடுவதால், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்