தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் சர்ச்சை பேச்சு

திருச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லா பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் சர்ச்சை பேச்சு
x
திருச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லா பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ரஹ்மத்துல்லா,அமைச்சரின் பேச்சு தொடர்ந்தால் "தென்னிந்தியாவே இருக்காது" என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த திருச்சி ஷரீப், பெரம்பலூரில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்