நீட் பயிற்சி மையத்தில் வருமானவரித்துறையினர் சோதனை : நீட் தேர்வு பயிற்சிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

கரூரில் நீட் பயிற்சி மையம், நடத்தி வரும் தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நீட் பயிற்சி மையத்தில் வருமானவரித்துறையினர் சோதனை : நீட் தேர்வு பயிற்சிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்
x
கரூரில் நீட் பயிற்சி மையம், நடத்தி வரும் தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில், இயங்கி வரும் தனியார் பள்ளியில், நீட் பயிற்சிக்காக, சுமார் 3 லட்சம் ரூபாய் வரை கட்டண வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், மதுரை, திருச்சி, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்