முருகன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது

திருச்சி நகைக்கடை கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பதுங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முருகன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது
x
திருவெறும்பூர் இந்திரா நகர் பகுதியில் மூளையாக செயல்பட்ட முருகன் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, நறுங்குழல்நாயகி நகருக்கு விரைந்த தனிப்படை போலீசார், அந்த வீட்டில் அதிரடி சோதனை செய்தனர். அங்கு முருகன் இல்லாத நிலையில், கடந்த 1ஆம் தேதி வாடகை கொடுத்துவிட்டு முருகன் தப்பியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் ஷேக் அப்துல்காதரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இன்னோவா, இன்டிகா கார்கள் வைத்திருந்ததும், நால்வருடன் நாய் ஒன்று வளர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியின் சாலையை மேம்படுத்த பணம் தருவதாக கூறியதும், 3 ஏசி பொருத்திய வீட்டில், இருந்ததும் தெரியவந்தது. வேலைக்கு பணிப்பெண் வைத்திருந்ததும், மனநலம் பாதித்த சிறுமி, ஒரு சிறுவன் ஆகியோரை தத்து எடுத்து வளர்த்து வரும் முருகனுக்கும், மனைவிக்கும் எச்.ஐ.வி. என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்