5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளி மண்டலத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வளி மண்டலத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, ஈரோடு,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுதவிர, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், கோவை, விருதுநகர், மதுரை, நெல்லை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்