ராயப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தமன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க இந்து சமய அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராயப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தமன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க இந்து சமய அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்பு தொடர்பாக  இந்து அறநிலைய துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். இந்த மனு, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையின் உதவியுடன் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நிலத்தை மீட்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 18 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்