கிண்டியில் திடீரென வெடித்துச் சிதறிய கதவுகள் : தடயவியல் துறையினர் ஆய்வு

சென்னை, கிண்டியில் வீட்டின் கதவுகள் திடீரென வெடித்து உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிண்டியில் திடீரென வெடித்துச் சிதறிய கதவுகள் : தடயவியல் துறையினர் ஆய்வு
x
கிண்டி நேரு நகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து.  இவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிக் கொண்டு உள்புறமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென முன்பக்க வாசல் கதவு, படுக்கை அறை கதவு, சமையல் அறை கதவு வெடித்து உடைந்தன. வீட்டில் இருந்த மாரிமுத்து மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கிண்டி உதவி கமிஷனர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் வந்து விசாரித்தனர். தடயவியல் துறை துணை இயக்குனர் ஷோபியா ஜோசப் வந்து ஆய்வு செய்தார். திடீரென கதவுகள் மட்டும் வெடித்து சிதறியது எப்படி என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார்.  


Next Story

மேலும் செய்திகள்