"பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி" - பிரதமருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
பேனர் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பேனர் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சுபஸ்ரீயின் மரணத்திற்கு நியாயம் வேண்டி தமிழர்கள் போராடி வரும் நிலையில், தங்களுக்கு பேனர் வைப்பதற்காக, தமிழக அரசு நீதிமன்றத்தின் அனுமதியை நாடியுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால், தமிழர்களின் உணர்வுகள் மீதான அக்கறையை பிரதிபலிக்கும் என்றும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்,
Next Story