உதகை : மாவோயிஸ்ட் ஆஜர்ப்படுத்தப்பட்ட நீதிமன்றத்திலேயே கோஷமிட்டதால் பரபரப்பு

கேரளாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் டேனிஸ் என்ற கிருஷ்ணாவை, கேரள போலீசார் உதகை அமர்வு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்ப்படுத்தினர்.
உதகை : மாவோயிஸ்ட் ஆஜர்ப்படுத்தப்பட்ட நீதிமன்றத்திலேயே கோஷமிட்டதால் பரபரப்பு
x
கேரளாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் டேனிஸ் என்ற கிருஷ்ணாவை, கேரள போலீசார் உதகை அமர்வு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்ப்படுத்தினர். ஆதிவாசிகளை நக்ஸல் பிரிவில் சேர்க்க முயற்சித்ததாகவும், அரசுக்கு எதிராக தூண்டியதாகவும் தொடர்ந்த வழக்கில் டேனிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி வடமலை வழக்கை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற வளாகத்திலேயே டேனிஷ் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து போலீசார் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.  




Next Story

மேலும் செய்திகள்