ராமநாதபுரம் : விசாரணைக்கு அழைத்து அத்துமீறிய காவலர்... அடி தாங்கமுடியாமல் அலறிய 5 வயது சிறுமி...
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் 5 வயது சிறுமியை, காவலர் ஒருவர் லத்தியால் அடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் 5 வயது சிறுமியை, காவலர் ஒருவர் லத்தியால் அடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. சவட்டையன் வலசையில் ஊர் கூட்டம் நடந்துள்ளது. அப்போது, சிறுமியின் தந்தை சண்முகநாதன் என்பவருக்கும், வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவரவர் வீட்டுக்குச் சென்ற நிலையில், திருப்புல்லாணி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், அத்துமீறி சண்முகநாதனின் வீட்டுக்குள் நுழைந்து விசாரணைக்கு அழைத்ததாக தெரிகிறது. விசாரணைக்கு பிறகு வருவதாக கூறிய சண்முகநாதனை, காவலர் தாக்கியதாக கூறப்படுகிறது. அதை தடுத்த 5 வயது சிறுமியின் மீதும் அடி விழுந்துள்ளது. இதில், அலறித் துடிக்கும் சிறுமி, தம்மை காவலர் அடித்தது குறித்து அழுதபடியே கூறும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story