ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : "நான் எங்கும் செல்ல மாட்டேன்" - ப.சிதம்பரம்

சி.பி.ஐ.யின் பிரதான கோரிக்கை தன்னை ஜாமீனில் விடக்கூடாது என்பது தான் என்றும், நான் வெளிதாடு தப்பி செல்வேன் என சி.பி.ஐ. கூறுவது முற்றிலும் தவறு என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
சி.பி.ஐ.யின் பிரதான கோரிக்கை தன்னை ஜாமீனில் விடக்கூடாது என்பது தான் என்றும்,  நான் வெளிதாடு தப்பி செல்வேன் என சி.பி.ஐ. கூறுவது  முற்றிலும் தவறு என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விளக்க மனுவில், ஜாமீன் கிடைத்தாலும் எங்கும் செல்ல மாட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தாம் என்றும் அதில் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார்.  மேலும் எனது குடும்பம் பல ஆண்டுகளாக இங்கு பாரம்பரியமாக வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், என்மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாத நிலையில், ஜாமீன் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, எனது ஜாமீனை சி.பி.ஐ. எதிர்க்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்