சத்தியமங்கலம் : பெண்ணிடம் நகை பறிப்பு - ஹெல்மெட் கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நாலரை சவரன் தங்க நகை பறிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் : பெண்ணிடம் நகை பறிப்பு - ஹெல்மெட் கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நாலரை சவரன் தங்க நகை பறிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சிறுமுகை நால்ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணன், தனது மனைவி கார்த்தீஸ்வரி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஹெல்மெட் கொள்ளையர்கள், கார்த்தீஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டனர். இது தொடர்பாக போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்