"பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்" - குறும்பட நடிகை போலீசில் பரபரப்பு புகார்

தன்னை இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக குறும்பட நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல் -  குறும்பட நடிகை போலீசில் பரபரப்பு புகார்
x
சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் குறும்பட நடிகை ஒருவர், காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், புழல் பகுதியை சேர்ந்த பக்ருதீன் என்பவர் தன்னை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பக்ரூதீனிடம் போலீசார் விசாரித்ததில், சில வருடங்களாக நடிகையுடன் பழக்கம் இருந்ததாகவும், அப்போது தன்னிடம் ஒன்றரை லட்சம் பணத்தை நடிகை வாங்கியதாகவும், பணத்தை திருப்பி கேட்டதால் கோபம் அடைந்து, தன் மீது புகார் கொடுத்திருப்பதாகவும் பக்ரூதின் தெரிவித்தார். இதற்கிடையே, மோசடி செய்ததாக பக்ரூதின் புகார் அளித்ததால், பதிலுக்கு பக்ருதீன் மீது பாலியல் புகாரை நடிகை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பக்ருதீன் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்