புரட்டாசியை முன்னிட்டு : "1 கிலோ வஞ்சிரம் ரூ.400"

புரட்டாசி விரதம் காரணமாக சென்னையில் மீன்கள் விலை பாதியாக குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
x
புரட்டாசி மாதம் தொடங்கிய பிறகு வந்துள்ள முதல் ஞாயிற்று கிழமையான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை சந்தையில் மீன்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் 800 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ வஞ்சிரம் மீன் தற்போது 400 ரூபாயாக குறைந்துள்ளது.  அதேபோல் வவ்வால், இறால், சங்கரா, நண்டு ஆகியவற்றின் விலையும் வெகுவாக சரிவடைந்துள்ளது. விலை குறைந்துள்ளதால் புரட்டாசி விரதம் கடைபிடிக்காதவர்கள் அதிக அளவில் வாங்கிச்செல்வதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்முதல் செய்யப்படும் மீன்களை, விற்பனையாகுமா என்ற சந்தேகம் இருப்பதால் குறைந்த அளவே வாங்கிச்செல்வதாக வீடுகளுக்கே கொண்டு வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்