சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர் நீதிமன்றத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு ' சர்வதேச காலிஸ்தான் ஆதரவாளர் குழு' என்ற பெயரில் கடிதம் ஒன்று வந்துள்ளது. ஹர்தர்ஷன் சிங் என்ற பெயர் மற்றும் மேற்கு டெல்லியில் உள்ள சுதர்சன் பூங்கா பகுதி முகவரியுடன் அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில், செப்டம்பர் 30ம் தேதியன்று அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிக்கும் என கூறப்பட்டுள்ளது. தனது மகனுடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தப் போவதாக ஹர்தர்ஷன் சிங் என்ற அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி என தனது இருப்பிடங்களையும் தனது செல்போன் எண்களையும் அவ்வப்போது மாற்றுவதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்