5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை திரும்ப பெறக்கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு
x
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை திரும்ப பெறக்கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை டிபிஐ வாளாகத்தில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு  அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில்  5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தக் கூடாது என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைபோல் புதிய கல்விக் கொள்கையை மத்திய மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும் என்று கூறி கோவையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற கோரி, 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்