இளைஞர்கள் தொழில்துறையில் ஆர்வமாக ஈடுபட வேண்டும் - வருமான வரித்துறை ஆணையர் வேண்டுகோள்

உற்பத்தி துறை சரிவிலிருந்து மீள வேண்டும் என்றால் இளைஞர்கள் அதிக அளவில் சொந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என வருமான வரித்துறை துணை ஆணையர் கோவிந்தராஜ் கூறினார்.
இளைஞர்கள் தொழில்துறையில் ஆர்வமாக ஈடுபட வேண்டும் - வருமான வரித்துறை ஆணையர் வேண்டுகோள்
x
உற்பத்தி துறை சரிவிலிருந்து  மீள வேண்டும் என்றால், இளைஞர்கள் அதிக அளவில் சொந்த தொழிலில் ஈடுபட  வேண்டும் என வருமான வரித்துறை துணை ஆணையர் கோவிந்தராஜ் கூறினார். கோவை அவிநாசி சாலையில்,  தொழில்துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தனியார் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தினால்தான் வெற்றிபெற முடியும் என்று கூறினார். பொருளாதாரத்தில் முன்னேற்றம் வேண்டும் என்றால் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோவிந்தராஜ் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்