6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த, முதியவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த,  முதியவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். ஜமீன் ஊத்துக்குளி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது 6 வயது பெண் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அதேபகுதியை சேர்ந்த பக்திகுமார் என்ற 65 வயது முதியவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தெரிவித்த தகவலின் பேரில், பெற்றோர் போலீசில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து, பக்திகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்