இன்று இரவு 12 மணிக்குள் ஜீவசமாதி - சாமியார் இருளப்பசாமி வாக்குறுதி

சிவகங்கை அருகே இருளாந்த சாமியார் ஜீவ சமாதி அடைவதற்கான இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
x
சிவகங்கை மாவட்டம்  பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்பசாமி ஜீவ சமாதியடையப்போவதாக தகவல் பரவியது. இதைடுத்து அங்கு சுற்றுவட்டார பகுதி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இருளப்பசாமியை பார்க்க செல்லும் மக்கள், ரூபாய் நோட்டுகள், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி அவரை வணங்கி வருகின்றனர். தனக்கு அடுத்ததாக வாரிசு ஒருவரை சாமியார் நியமித்துள்ளார்.

பாசாங்கரை என்ற கிராமத்தில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சாமியார் இருளப்பசாமியை உயிருடன் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என போலீசார்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் "தந்தி டிவி"க்கு பேட்டியளித்த இருளப்பசாமி, இரவு 12.05  மணிக்குள் தான் ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று தெரிவித்தார். தான் நேரடியாக லிங்கத்துடன் ஐக்கியம் ஆகி விடுவேன் என ஜீவசமாதி அடைய காத்திருக்கும் சாமியார் இருளப்ப சாமி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்