தேசிய வர்த்தக வாரிய உயர்மட்ட கூட்டம் - தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு

தேசிய வர்த்தக வாரியத்தின் உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
தேசிய வர்த்தக வாரிய உயர்மட்ட கூட்டம் - தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு
x
தேசிய வர்த்தக வாரியத்தின் உயர்மட்ட கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில், தனியார் நட்சத்திர விடுதியில் இந்த கூட்டம் நடந்தது.  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் வாகனங்களின் ஏற்றுமதி கடுமையாக சரிந்துள்ளதாக தெரிவித்தார். கார் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தாம் வலியுறுத்தியதாக அமைச்சர் சம்பத் கூறினார். ஐவுளித்துறையை ஊக்குவிக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்