சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா : ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா : ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்
x
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியைமேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் உத்தரவிட்டது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, தஹில் ரமானி விடுத்த வேண்டுகோள் ஏற்கப்படாததை அடுத்து, அதிருப்தி அடைந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அடுத்த ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி தஹில் ரமானி ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்