கையும் களவுமாக பிடிபட்ட கஞ்சா வியாபாரி : அடி உதையுடன் போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவையில் கஞ்சா வியாபாரி பாலாஜியை கையும்களவுமாக பிடித்த பொதுமக்கள், அடித்து உதைத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
கையும் களவுமாக பிடிபட்ட கஞ்சா வியாபாரி : அடி உதையுடன் போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
x
கோவையில் கஞ்சா வியாபாரி பாலாஜியை கையும்களவுமாக பிடித்த பொதுமக்கள், அடித்து உதைத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர். அண்மைக் காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில், மாதம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பாலாஜி என்பவரை அப்பகுதி மக்கள் பிடித்தனர். விசாரணையில், நீண்டகாலமாக கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினர், பாலாஜியை அடித்து உதைத்ததோடு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரது வீட்டில் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்