பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
x
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லியில் உள்ள பாய்லர் தொழிற்சாலையில் பணியாற்றிவந்த கண்ணன் மீது உடன் பணிபுரிந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.  சம்பந்தபட்ட பெண் வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டதால், அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள தொழிலாளர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த‌து. இந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தொழிலாளர் நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது சம்பந்தபட்ட நிறுவனங்களின் கடமை என்று குறிப்பிட்ட நீதிபதி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் கருணை காட்ட முடியாது என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்