திருமண ஆசை காட்டி 10ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றிய இளைஞர்

திருமண ஆசைகாட்டி 10ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் உறவு வைத்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண ஆசை காட்டி 10ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றிய இளைஞர்
x
திருமண ஆசைகாட்டி 10ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் உறவு வைத்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புழல் கல்பாக்கம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியின் தாயார், மாவட்ட சமூக நல அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது மகளை, திருமண செய்துகொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பல முறை உறவு வைத்துக்கொண்டதாகவும், பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  ஏமாற்றியது குறித்து கேட்டபோது, ஆபாசமாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து  புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்