100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது

கும்பகோணத்தில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நள்ளிரவில் காவிரியில் கரைக்கப்பட்டது.
100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது
x
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கும்பகோணத்தில், பிள்ளையாம் பேட்டை கொரநாட்டு கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்டோர் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை முக்கிய வீதிகளில் பிரதிஷ்டை செய்து  தினமும் காலை மாலை பூஜைகள் நடத்தினர். இந்நிலையில், விநாயகர் சிலைகள், ஊர்வலமாக கும்பகோணம் மகாமக குளக்கரைக்கு கொண்டுவரப்பட்டது அங்கே வீரசைவ மடத்தில் அருகே விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு விநாயகராக ஊர்வலமாக பாலக்கரைக்கு கொண்டு வரப்பட்டு நள்ளிரவில் ஆற்றில் கரைக்கப்பட்டது. சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்