காசிமேடு : உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கைது

சென்னை காசிமேட்டில் உணவகத்தில் புகுந்து உணவக ஊழியர்களை தாக்கி அட்டகாசம் செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
காசிமேடு : உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கைது
x
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே தனியார் உணவகம் ஒன்று உள்ளது. இந்நிலையில், இந்த உணவகத்திற்கு வந்த அப்பகுதியை சேர்ந்த ரவுடி பிரேம்குமார் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது பணம் கேட்ட உணவக ஊழியர்களை பிரேம்குமார் தாக்கி உள்ளார். மேலும், இருசக்கர வாகனத்தை உணவகத்தின் உள்ளே எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு, நாற்காலிகளையும், பாத்திரங்களையும் தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து உணவக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரவுடி பிரேம்குமாரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்