கடலூர் : டிஎன்பிஎஸ்சி தேர்வு அறையில் செல்போன்கள் பறிமுதல்

கடலூரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய இரு மாணவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் : டிஎன்பிஎஸ்சி தேர்வு அறையில் செல்போன்கள் பறிமுதல்
x
கடலூரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய இரு மாணவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூர் புனித வளனார் கல்லூரியில் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது  தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்த இரண்டு பேர் பிடிபட்டனர். இதைத்தொடர்ந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் இருவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் தேர்வு நடைபெறும் வளாகத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட செல்போன்களை கைப்பற்றிய மாவட்ட ஆட்சியர், அந்த பகுதியில் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்