விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை புகார் : வருவாய் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றிதழ் கேட்டு சென்ற விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டிஆர்ஓ உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றிதழ் கேட்டு சென்ற விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டிஆர்ஓ உத்தரவிட்டார். திருமால்புரத்தை சேர்ந்த ஒரு பெண் , தனது கணவர் இறந்து விட்டதால் விதவை உதவி தொகை பெறுவதற்காக சான்றிதழ் கேட்டு வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமாரை அணுகியுள்ளார். அப்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி கொண்ட ஜெயக்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story