செங்கல்பட்டு : வெடிகுண்டை ஏரியில் வெடிக்க வைக்க நீதிமன்றம் தடை

செங்கல்பட்டு அருகே மானாமதி பகுதியில் கைபற்றிய வெடிகுண்டை ஏரியில் வெடிக்கவைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
செங்கல்பட்டு : வெடிகுண்டை ஏரியில் வெடிக்க வைக்க நீதிமன்றம் தடை
x
செங்கல்பட்டு அருகே மானாமதி பகுதியில் கைபற்றிய வெடிகுண்டை ஏரியில் வெடிக்கவைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த மானாம்பதி கிராமத்தில் நேற்று முன்தினம் வெடிகுண்டு வெடித்து, இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில், வெடிக்காத நிலையில் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டை செயலிழக்க செய்ய ஆள் நடமாட்டம் இல்லாத மானாமதி ஏரி பகுதியில் சுமார் மூன்று அடி ஆழத்தில் மன்மூட்டைகளை அடுக்கி வெடிகுண்டை வைத்தனர். இதற்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் கைபற்றிய வெடிகுண்டை நீதிமன்றத்தில் ஒபடைக்கவும் உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வெடிகுண்டை போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்