நீலகிரி : பல பகுதிகளில் கனமழை - ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர், நடுவட்டம், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், நடுவட்டம், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கூடலூர் பகுதியில் உருவாகும் பாண்டியாறு, புன்னம்புழா, மாயார் உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரம் முழுவதும் வானம் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. கனமழை காரணமாக ஊட்டி- கூடலூர் சாலையில் மண்சரிவுகள் ஏற்பட்டன.
Next Story