தீவிரவாதிகள் ஊடுருவல் - தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 2-வது நாளாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் ஊடுருவல் - தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
x
வரலாற்று புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். ஈரோடு மாவட்டம் கருக்கல்பாளையம் உள்பட 13 சோதனை சாவடிகளில் சந்தேகத்திற்கு இடமான 100 பேர் பிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைரேகைகள் பதிவு செய்த பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடியில் 2-வது நாளாக கண்காணிப்பு பணிகள் தொடர்கிறது. சட்டம் ஒழுங்கு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கமாண்டோ படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. ஓடந்துறை சோதனை சாவடியில் தொடங்கிய அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாகச்சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்