சாத்தூரில் சார்பு ஆய்வாளரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் சார்பு ஆய்வாளரை தாக்கிய 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர்.
சாத்தூரில் சார்பு ஆய்வாளரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் சார்பு ஆய்வாளரை தாக்கிய 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். சாத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ், அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற ஆட்டோவை அப்புறப்படுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பத்மநாபன், கண்ணன் ஆகியோர் சார்பு ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சுந்தர்ராஜூக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுந்தர்ராஜை தாக்கிய 2 இளைஞர்களையும் கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்