திருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்
முறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.
முறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர். ஊராட்சி நிர்வாகம் 6 மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று அவர்கள் அப்போது குற்றம் சாட்டினர். இதனால் திருத்தணி-நல்லாட்டூர் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story