நாகை : கோயிலில் கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு

நாகை மாவட்டம் கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகளை, திருக்குவளை அருகே தனிப்படை போலீசார் மீட்டனர்.
நாகை : கோயிலில் கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு
x
நாகை மாவட்டம் கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகளை, திருக்குவளை அருகே தனிப்படை போலீசார் மீட்டனர். கடந்தவாரம் இந்த கோவிலில் இருந்து ஐம்பொன்னால் ஆன முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் அம்மன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை ராமன்கோட்டகம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 3 ஐம்பொன் சிலைகளை மீட்டனர். இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் ஆகும். சிலைகளை பதுக்கியதாக வேதாரண்யத்தை சேர்ந்த யோகேஸ்வரனை கைதுசெய்த போலீசார், மற்றொரு சிலை குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்