தேக்கடி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை - வியாபார தோல்வியா? குடும்பப் பிரச்சனையா?

தேக்கடி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேக்கடி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை - வியாபார தோல்வியா? குடும்பப் பிரச்சனையா?
x
கேரள மாநிலம் தேக்கடி நுழைவுப் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த மே மாதம் திருவனந்தபுரம் ஆழூரைச் சேர்ந்த விஷ்ணு என்ற பிரமோத் பிரகாசன், தனது மனைவி, காஞ்சிபுரம் சப்தகிரி நகரைச் சேர்ந்த ஜீவா மற்றும் தாயார் சோபனா உடன் வந்து தங்கி உள்ளார். விவசாய நிலங்களை வாங்க வந்திருப்பதாக விடுதி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். பிரமோத் பிரகாசன் மற்றும் ஜீவா ஆகியோர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட​ர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில்,விடுதி உரிமையாளர் அனீஷ் விடுதி அறைகளை இன்று பார்வையிட்டு உள்ளார். அப்போது பிரமோத் பிரகாஷ் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததோடு, அழைத்தும் யாரும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது 2 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை பார்த்து,  உரிமையாளர் அனீஷ் குமுளி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த குமுளி போலீசார், தூக்கில் தொங்கி நிலையில் இறந்து போயிருந்த பிரமோத் பிரகாஷ், சோபனா மற்றும் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்த ஜீவா உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு கோட்டயம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் நடந்த அறை, அவர்கள் பயன்படுத்தி வந்த 2 கார்களையும் போலீசார் சோதனை செய்தனர். தடயவியல் நிபுணர்கள்  உதவியுடன் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்