காஷ்மீர் விவகாரம் குறித்து சுவரொட்டி ஒட்டிய மாணவர்கள் - விளக்கம் கேட்டு பல்கலைக் கழகம் நோட்டீஸ்

காஷ்மீர் விவகாரம் குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி பேசியதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் விவகாரம் குறித்து சுவரொட்டி ஒட்டிய மாணவர்கள் - விளக்கம் கேட்டு பல்கலைக் கழகம் நோட்டீஸ்
x
காஷ்மீர் விவகாரம் குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி  பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தடையை மீறி பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகளை ஒட்டிய மாணவர்கள்,  அதை  நீக்க கோரிய பேராசிரியர்களிடம் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக ஒழுக்க நெறி கண்காணிப்பாளர் ராஜகோபால் 5 மாணவிகள் உட்பட 30 மாணவ மாணவிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்