காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமரை அவமதிக்கும் வகையில் வரைபடம் - மக்கள் அதிகார அமைப்பின் நிர்வாகி கைது
மக்கள் அதிகார அமைப்பின் தேனி மாவட்ட போடி நகர செயலாளர் ஜோதிபாசுவை போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் இணையதளத்தில் வரைபடம் வெளியிட்டதாக மக்கள்அதிகார அமைப்பின் தேனி மாவட்ட போடி நகர செயலாளர் ஜோதிபாசுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Next Story